"பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? " மகாகவி பாரதியார்
1.10.13
23.1.13
ரணம்
தூரம்
காரணமாய்..
தூரத்து
உறவுகளின்
துயரம்
மறந்ததேனோ?
ஒட்டியிருந்த
ஈரத்தை…
இதயத்தின்
ஈரத்தை..
துடைத்து
உலர்த்தியதேனோ?
அழ
ஆவேசப்பட,
கை
கொடுக்க,
துயர்
துடைக்க,
தோள்
கொடுக்க
இனம்..
மொழி...
உறவு....
எந்த
ஒற்றுமையும்
வேண்டாம்
மனிதம்
இருந்தால் போதும்!
கண்கள்
மூடு,
ஒரு
நிமிடம்
உன்னை
அங்கு நிறுத்தி
சித்தரி…
அடி
உதை
காயம்
குண்டு
மழை
முள்
வேலி
பச்சிளம்...இரத்தம்... பரிதாபம்
இன்னும்
சொல்ல வாய் கூசும்
ரணம்
மூடிய
இமைக்குள்
உன்
விழித் திரையிலும்
இரத்தம்
கசியும்..
இப்போது
சொல்
அழ
ஆவேசப்பட
கை
கொடுக்க
துயர்
துடைக்க
தோள்
கொடுக்க
இனம்..
மொழி...
உறவு....
எந்த
ஒற்றுமையும்
வேண்டாம்
மனிதம்
இருந்தால் போதும் !
19.9.09
Subscribe to:
Posts (Atom)